சில்லுனு ஒரு காதல் சீரியல் பற்றி நீங்கள் அறியாதவை ???

 சில்லுனு ஒரு காதல் என்பது ஐனவரி 4, 2021 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது கலர்ஸ் மராத்தி மொழித் தொடரான 'ராஜா ராணிச்சி கா ஜோடி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்



 


உருவாக்குனர்  : அஹமத்

திரைக்கதை : செல்வம் கந்தசாமி


வசனம் : ரதிபராதி

வசன உதவி :நாகையா

இயக்குனர் : சுரேஷ் சண்முகம்

நடிகர்கள் : சமீர் அஹமத்து , தர்ஷினி கௌதா

பிண்ணனி இசை : ஜேம்ஸ் விக்டர்

நாடு : இந்தியா

தயாரிப்பாளர்கள் : நிரோஷா

ஒளிப்பதிவு : பாலா குருநாதன்

ஒளிப்பதிவு இயக்குனர் : அகிலன் கல்யாண்

தொகுப்பு :  ச. கேமாகுமார் , மரியா ஜோசப் , ராகேஷ் ரங்கராஜ்

தயாரிப்பு நிறுவனங்கள் :  மெராக்கி பிலிம் ஒர்க்ஸ்

ஒளிபரப்பு , அலைவரிசை : கலர்ஸ் தமிழ்

ஒளிபரப்பான காலம் : 4 ஐனவரி 2021 

கதாப்பாத்திர விபரம் : இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக 'சமீர் அஹமத்து' என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு 'தர்ஷினி' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .





  கதைச் சுருக்கம் :    இந்த தொடரின் கதை கிராமத்தை சேர்த்த கயல்விழி என்ற சுட்டித்தனமான  இளம் பெண்ணான கயல், போலீஸ் வேலை தான் சிறந்தது என்று கருதிகிறாள். ஒரு இளம் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான சூர்யா குமார் என்பவரை சந்திக்கிறாள், அவரை பார்த்த நொடியில் இருந்து அவர் மீது காதல் வசப்படுகின்றார்.


அதன்பிறகு அவரோடு தொடர்ந்து இருப்பதற்காக தளராத விடாமுயற்சியையும், தேடலையும் மேற்கொள்ளும் கயல் தனது தீவிர முயற்சியில் வெற்றி கண்டு கயல்விழியை சூர்யகுமார் திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை காதலும் பரபரப்பும் நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.


இது ஒரு துடிப்பானஇளம் வயது பெண்ணிற்கும் ஒரு இளம், நேர்மையான போலீஸ் அதிகாரியான சூர்யாவுக்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அழகான காதல் வடிவில் இது சித்தரிக்கிறது.

தற்போதைய கதை அமைப்பு :  விவாகரத்து பெற்றுக்கொண்ட கயல் எந்த வேலையை கெத்து என நினைத்தாளோ அந்த வேலையை தழுவுவதாகவும் , அதற்கான பயிற்சியில் இறங்குவதாகவும் கதை அமை கின்றது.

மற்றும் மீண்டும் சூரியாவுடன் இணைவற்கான வேலையையும் ஆரம்பிப்பதாகவும் , சூரியா மீண்டும் கயல் மீது காதல் கொள்வதாகவும் அமைகின்றது. 

நடிகர்கள் விபரம் :  இந்த தொடரில் புதுமுக நடிகரான 'சமீர் அஹமத்து' என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் 2019 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு என்ற போட்டியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு திருமணமாகி விட்டது.




இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள்.


Comments

Post a Comment

Popular posts from this blog

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂